புட்டினுக்கு தனிப்பட்ட கடிதம் அனுப்பிய மெலனியா ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தனிப்பட்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
புட்டினின் அலாஸ்கா பயணத்தின் போது அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த கடிதத்தை புட்டினுக்கு கொடுத்தாக கூறப்படுகின்றது.
அந்த கடிதத்தில் யுக்ரைன் மற்றும் ரஷ்யாவில் உள்ள குழந்தைகளின் அவலநிலை குறித்த உண்மைகளை அவர் முன்வைத்தாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை ரஷ்யா அல்லது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அவர்களது குடும்பங்கள் அல்லது பாதுகாவலர்களின் அனுமதியின்றி மாற்றுவது ஐக்கிய நாடுகளில் இனப்படுகொலை ஒப்பந்தத்தின்படி போர்க் குற்றமாகும்.
ரஷ்யா, மாஸ்கோவில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை போர் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மெலனியா ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.