மெல்பேர்ண் மருத்துவரின் மகள் மீது கத்திக்குத்து தாக்குதல்; சந்தேக நபர் மரணம்
அவுஸ்திரேலியா - மெல்பேர்ணின் Kew-இல் வசிக்கும் மருத்துவர் ஒருவரின் மகள் மீது கத்திகுத்தி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தில் Kew-இல் வசிக்கும் மருத்துவர் சிறப்பு மருத்துவர் பிலிப் மைக்கேலின் 18 வயது மகள், அவரது வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் மரணத்தில் சந்தேகம் இல்லை
தனது வீட்டிற்குத் திரும்பிய ஒரு இளம் பெண், மறைந்திருந்த ஒரு நபரால் 11 முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவதியை தாக்கியவர் அவளுக்கு நன்கு தெரிந்த 18 வயது இளைஞன் என்றும்பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு அவர் ஆண்ட்வெர்ப்பில் இறந்து கிடந்தார். சந்தேக நபரின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும், தற்கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்தி குற்றங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
அதேவேளை கடந்த பத்தாண்டுகளில் மெல்பேர்ணில் 245 கத்தி தொடர்பான கொலைகள் நடந்துள்ளடன் , அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கியது என்றும் தெரிவிக்கபப்டுகின்றது.