ஜோன்சன் அண்ட் ஜோன்சன் கொரோன தடுப்பூசிக்கு மெக்சிகோ அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது
மெக்சிகோ நாட்டில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2.22 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 19.21 லட்சம் பேர் அங்கு குணமடைந்து உள்ளனர். மெக்சிகோவில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு 6 நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் 4 நிறுவனங்களின் தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியின் ஆய்வக முடிவுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதால், அதனை அவசரகால பயன்பாட்டிற்கு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என மெக்சிகோ அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே மெக்சிகோவில் பைசர், கோவேக்சின், அஸ்ட்ரா செனகா உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
தடுப்பூசி செலுத்த தொடங்கியதன் பின், அங்கு கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.