முடிவுக்கு வரும் ஸ்கைப் தொழில்நுட்பம்
மைக்ரோசாஃப்ட் ஸ்கைப் (Skype) சேவை எதிர்வரும் மே மாதம் 5 முதல் முற்றிலும் நிறைவு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் அறிமுகமான ஸ்கைப், வீடியோ அழைப்புகள், குழு சந்திப்புகள், உடனடி குறுந்தகவல் பரிமாற்றம் (Instant Messaging), கோப்பு பகிர்வு மற்றும் அலைபேசி மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்புகளைச் செய்வதற்கான வசதிகளை வழங்கியது.
2011ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஸ்கைப் சேவையை கொள்வனவு செய்தது.
2023 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட மைக்ரோசாஃப்ட் தகவலின்படி, நாளொன்றுக்கு 36 மில்லியன் பேர் ஸ்கைப் பயன்படுத்தியுள்ளனர்.
மைக்ரோசாஃப்ட், தனது Teams (டீம்ஸ்) செயலியை அதிக முன்னிலையில் கொண்டு வந்து குழு சந்திப்புகள், கோப்பு பகிர்வு, வேலை செய்யும் இடங்களில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு மையமாக உருவாக்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், Teams மாதம் 320 மில்லியன் செயல்படும் பயனர்களைக் கொண்டதாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
மைக்ரோசாஃப்ட், ஸ்கைப் பயனர்கள் தங்கள் கணக்குகளைக் கொண்டு இலவச Teams பதிப்பில் உள்நுழையலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்கைப் பயனர்களின் அழைப்புகள், சந்திப்புகள் மற்றும் தொடர்புகள் Teams-ல் தானாகவே பிரதிபலிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
இதே நேரத்தில், Teams பயனர்கள் ஸ்கைப் பயனர்களுடன் உரையாடவும், அழைக்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.
ஸ்கைப் சேவை 2025 மே 5ம் திகதிக்கு பிறகு முடிவடைய உள்ளதால், பயனர்கள் Teams-ஐ புதிய நிலையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என மைக்ரோசாஃப்ட் அறிவுறுத்தியுள்ளது.