சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்; நால்வர் பலி
சிரியா சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிரிய அரச செய்திச் சேவையான சனா (SANA) செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் சிப்பாய் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்ததாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 2.00 மணியளவில் நடத்தப்பட்டாக அச்செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மேலும் இத்தாக்குதல் காரணமாக விமான நிலைய சேவைகள் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.