கனேடிய பாடசாலை மாணவியுடன் மாயமான அமெரிக்கர்: வெளியான அதிர்ச்சி சம்பவம்
கனடாவின் எட்மண்டன் பகுதி பாடசாலை மாணவி மாயமான விவகாரத்தில் அமெரிக்கர் ஒருவர் கைதாகியுள்ளார்.
குறித்த நபர் மீது கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேலும், எட்மண்டன் பொலிசாரும் குறித்த நபர் மீது சிறார் துஸ்பிரயோகம் தொடர்பில் வழக்கு பதிய இருப்பதாக அறிவித்துள்ளனர். தொடர்புடைய 13 வயது சிறுமி சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்லாததால் அல்லது அன்று மதியம் வீடு திரும்பாததால் ஜூன் 24ம் திகதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் அமெரிக்க மாகாணமான ஓரேகானில் கண்டுபிடிக்கப்பட்டதாக எட்மண்டன் பொலிசார் சனிக்கிழமை அறிவித்தனர்.
சிறுமியுடன் சிக்கிய நபர் 40 வயதான நோவா மட்ரானோ எனவும், அமெரிக்க அதிகாரிகளே கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது அவர் மாகாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய முறைப்படி அவரை கனடாவுக்கு அழைத்துவர நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் எட்மண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.