53 பேருடன் பாலி கடற்பரப்பில் மாயமான நீர்மூழ்கியை இழந்துவிட்டோம்!
53 பேருடன் பாலி கடற்பரப்பில் காணாமல்போன நீர்மூழ்கியை இழந்துவிட்டோம் என இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது.
இரண்டுநாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னரே இந்தோனேசிய கடற்படை இதனை அறிவித்துள்ளது.
நீர்மூழ்கியின் சில பகுதிகளும் சில பொருட்களும் நீர்மூழ்கி காணாமல்போன பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது.
நீர்மூழ்கியின் பல பாகங்கள் அல்லது கூறுகள் என கருதப்படும் துண்டுகள் அல்லது பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என தெரிவித்துள்ள இந்தோனேசிய கடற்படை தளபதி யுடோ மார்கொனோ வெளியிலிருந்து இருந்து அழுத்தம் அல்லது டோர்பிடோ லோஞ்சரில் விரிசல் இல்லாதிருந்தால் அந்த பாகங்கள் கப்பலில் இருந்து வெளியே வராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரிஸ்கோப்பிற்கு பயன்படுத்தப்படும் கிறீஸ் போத்தலொன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பிட்ட பகுதியில் வேறு எந்த கப்பலும் பயணிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.