53 பேருடன் மாயமான நீர்மூழ்கியிலன் நிலை என்ன? அதிகாரிகள் அச்சம்
53 பேருடன் காணாமல்போன இந்தோனேசிய நீர்மூழ்கியில் எந்தநேரமும் ஓக்சிசன் முடிவடையலாம் என தெரிவித்துள்ள இந்தோனேசியா அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்கா உட்பட நாடுகள் அதனைகண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இணைந்துகொண்டுள்ளன.
நீர்மூழ்கி இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்றால் சனிக்கிழமை காலையுடன் ஒக்சிசன் முடிவடையும் ஆபத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போன நீர்மூழ்கி 500அடிக்குள் காணப்படாவிட்டால் ஆபத்து எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவி;ன் நீர்மூழ்கி படைப்பிரிவின் தளபதி ஹரிசெட்டியாவனும் காணாமல்போன நீர்மூழ்கியிலிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீர்மூழ்கியில் உள்ளவர்கள் உயிர்தப்புவதற்கான சாத்தியங்கள் குறைவு என தெரிவித்துள்ள இந்தோனேசிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் நீரின் அழுத்தம் காரணமாக விரிசல்கள் சிதைவுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா அவுஸ்திரேலியா சிங்கப்பூர் இந்தியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கியை கண்டுபிடிப்பதற்காக தங்கள் உதவிகளைவழங்கியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் இரு கடற்படை கலங்கள் தேடுதல் இடம்பெறும் பகுதிக்குசென்றுகொண்டிருக்கின்றன.


