கனடாவில் காணாமல் போன 14 வயது பெண் வழக்கு... குற்றவியல் வழக்காக மாற்றம்
கனடாவில் 14 வயது சிறுமி ஒருத்தி காணாமல் போன வழக்கு, குற்றவியல் வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள Bathurst என்ற இடத்தைச் சேர்ந்த Madison Roy-Boudreau (14) என்ற சிறுமி, இம்மாதம் (மே) 11ஆம் திகதி காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றால்.
ஆனால், அவள் மாலை வீடு திரும்பாததால் பொலிசில் புகாரளித்தார் அவரது தந்தை. பொலிஸ் விசாரணையில், Madison, 11ஆம் திகதி காலை ஒரு சாம்பல் நிற ட்ரக்கில் ஏறிச்சென்றது மறுநாள் தெரியவந்தது.
பொலிசார் அந்த ட்ரக்கைக் கண்டுபிடித்து, அது நிறுத்தப்பட்டிருந்த இடத்தையும் ஆய்வு செய்தார்கள்.
13ஆம் திகதி, அந்த ட்ரக்கின் சாரதி கைது செய்யப்பட்டார். ட்ரக் கைப்பற்றப்பட்டது. அன்றே, அப்பகுதியில் உள்ள குவாரிகள் பலவற்றில் பொலிசார் சோதனை மேற்கொண்டார்கள்.
ஆனால், பலனேதும் இல்லை. பின்னர் வழக்கு தொடர்பாக Steven Laurette (42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் வழக்குக்கும் என்ன தொடர்பு என்பதை பொலிசார் தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். இந்நிலையில், காணாமல் போன வழக்கு, குற்றவியல் வழக்காக மாற்றம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்கிறது.