ஒன்ராறியோவில் தொழிற்சாலையில் நடந்த விபத்து... 50 வயது நபர் தீவிர சிகிச்சையில்
ஒன்ராறியோவின் மிசிசாகா நகரில் தொழிற்சாலை ஒன்றில் நடந்த விபத்தைத் தொடர்ந்து 50 வயது கடந்த ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுமார் 3.30 மணியளவில் அவசர உதவிக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற அவசர உதவிக்குழுவினர் அந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அந்த நபருக்கு தலையில் பலத்த காயம் பட்டிருந்ததாக பீல் பிராந்திய துணை மருத்துவ சேவைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பீல் பிராந்திய பொலிசார், அந்த நபர் பணியிடத்தில் இருந்தபோது வாகனம் மீது மோதியதாக தெரிவித்தனர்.
இருப்பினும் விரிவான விசாரணைக்கு பின்னரே, நடந்த சம்பவத்தின் பின்னணி தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.