போட்டிக்கு முன் ஐசியுவில் அனுமதி! மறுநாள் கிரவுண்டில் அரைசதம்.. பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுக்கு குவியும் பாராட்டுக்கள்
நேற்றைய டி20 அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில், மேத்யூ வேட் மற்றும் ஸ்டாய்னிஸுன் அபார ஆட்டத்தால், ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
இந்த போட்டியின் தொடக்க ஆட்டக்காரரான பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 67 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய தூணாக அமைந்தார்.
ஆனால், பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவினாலும், முகமது ரிஸ்வானுக்கு தற்போது ரசிகர்களிடையெ பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணமே, போட்டிக்கு இரண்டு நாட்கள் முன் ரிஸ்வான் துபாய் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சுவாச குழாயில் ஏற்பட்ட தீவிர தொற்றின் காரணமாக இரண்டு நாள் ஐசியூவில் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் ஆகி அணிக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நின்று ஆடி அணிக்காக 67 ரன்கள் குவித்தார். இதனால் எந்த ஒரு வீரர்களாக இருந்தாலும், ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ரிஸ்வான் எடுத்திருந்த முயற்சிக்கு பல பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Can you imagine this guy played for his country today & gave his best.
— Shoaib Akhtar (@shoaib100mph) November 11, 2021
He was in the hospital last two days.
Massive respect @iMRizwanPak .
Hero. pic.twitter.com/kdpYukcm5I