ஆப்கானிஸ்தானில் மகனை பறிகொடுத்த கனேடிய தாயாரின் கலங்க வைக்கும் கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியரின் தாயார் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஆப்பானிஸ்தானில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர் கார்ப்ரல் Andrew Eykelenboom. இவரது தாயாரே தற்போது, ஆப்கானிஸ்தானில் நடந்தேறும் நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்து, முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கனேடிய ராணுவத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிவர் கார்ப்ரல் Andrew Eykelenboom. 7 மாத பணிக்காக ஆப்கானிஸ்தானுக்கு சென்றவர், உடல் சிதறிய நிலையில் சடலமாகவே கனடாவுக்கு கொண்டுவரப்பட்டார்.
தற்போது ஆப்கானிஸ்தாலில் நடக்கும் மிக மோசமான சூழலை கருத்தில் கொண்டு, கனேடிய மக்களுக்கு போதிய உதவிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஆண்ட்ரூவின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.
உலகம் மிக மோசமான சூழலில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவால் நாளும் இறப்புகள் ஏற்படுகிறது. கனடா மட்டுமின்றி, உலக நாடுகள் எல்லாம் எண்ணிப்பார்க்க முடியாத கட்டத்தினூடே கடந்து செல்கிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்ப இளையோர்கள் படும் பாடு தம்மை நொறுக்குவதாக கூறும் அவர், இது போன்ற ஒரு சூழலில், காப்பாற்ற சென்ற இடத்தில் தான், தமது மகன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உலகில் இரக்கமுள்ளவர் என்ற நற்பெயர் நம்மிடடம் உள்ளது, அதை நாம் காப்பாற்றிக்கொள்வோம். நாம் அந்த நற்பெயரை பாதுகாக்க வேண்டும், மட்டுமின்றி நாம் சரியானதையே செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.