கண்ணில் பட்டவர்களை துப்பாக்கியால் சூட்ட நபர்! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மொண்டெனேகுரோ. அந்நாட்டின் மெடொவினா நகரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்றைய தினம் (12-08-2022) இடம்பெற்றுள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக 34 வயதான நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினார்.
குடும்ப உறுப்பினர்கள், தெருவில் நடந்து சென்றவர்கள் என கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.
ஆனால், அந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பொலிஸார் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.