கனடாவில் மனைவியைக் கொன்றுவிட்டு மாயமான கணவன்... பொலிசார் வலைவீச்சு
மொன்றியல் பொலிசார், தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு மாயமான நபர் ஒருவரை வலைவீசித் தேடிவருகிறார்கள். கியூபெக் மாகாணத்தில் இதுவரை 14 சம்பவங்களில் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
14ஆவது சம்பவம் மொன்றியலில் நடந்தேறியுள்ளது. திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், அவசர உதவி கோரி வந்த அழைப்பு ஒன்றைத் தொடர்ந்து மொன்றியலில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
அங்கு 32 வயதுள்ள ஒரு பெண் உயிரிழந்து கிடக்க, குழந்தை ஒன்றும் அங்கிருந்திருக்கிறது. 30 வயதுடைய அந்த பெண்ணின் கணவர் அந்த வீட்டிலிருந்து தப்பியோடியதை சிலர் பார்த்ததாக கூறியதைத் தொடர்ந்து, பொலிசார் அந்த நபரைத் தேடும் முயற்சியில் இறங்கினர். அவருடையை வாகனம் பாலம் ஒன்றிற்கு அருகே இருப்பதைக் கண்டதால் நதியிலும் தேடுதல் வேட்டையில் இறங்கினர் பொலிசார்.
ஆனால், இதுவரை அவர் கிடைக்கவில்லை. பொலிசார் தொடர்ந்து அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.