தெற்கு கியூபெக் பகுதிகளை உலுக்கிய நிலநடுக்கம்: திடுக்கிட்டு விழித்த மக்கள்
ஜொலியட் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக திங்களன்று காலை தெற்கு கியூபெக்கில் மக்கள் திடுக்கிட்டு விழித்துள்ளனர்.
ரிக்டர் அளவில் 3.9 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
காலை சுமார் 7.03 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது மாண்ட்ரீல், ரெபெண்டிக்னி மற்றும் ஜொலியட் பகுதிகளிலும் உணரப்பட்டது.
பலர் உடனடியாக இது உண்மையில் நிலநடுக்கமா என்ற கேள்விகளுடன் சமூக ஊடகங்களை நாடியுள்ளனர். 3.5 முதல் 5.4 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்படும் எனவும், ஆனால் மிக அரிதாகவே பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் கனடாவை பொருத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,000 நிலநடுக்கங்கள் அடையாளம் காணப்படுவது உண்டு எனவும், ஆனால் அதில் 50 எண்ணிக்கை மட்டுமே மக்கள் உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.