பிரித்தானியாவில் மேலும் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 29ஆயிரத்து 173பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 56இலட்சத்து 97ஆயிரத்து 912பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 158பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 இலட்சத்து 18ஆயிரத்து 550பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 699பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 44இலட்சத்து 50ஆயிரத்து 204பேர் பூரண குணமடைந்துள்ளனர்.