கொரோனா காலகட்டத்தில் இந்த பிரச்சினையால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு
கொரோனா காலகட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா துவங்கிய முதல் ஏழு மாதங்களில், (2020 மார்ச் முதல் செப்டம்பர் வரை) 81,000 கனேடியர்கள் வரை போதைப்பொருட்கள், மதுபானம் முதலானவற்றின் பயன்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது (2019 மார்ச் முதல் செப்டம்பர் வரை) எண்ணிக்கையில் 4,000 அதிகமாகும்.
இன்று, கனடாவின் சுகாதார தகவல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது சுகாதார நோக்கில் பார்க்கும்போது, இது நல்ல விடயம் அல்ல என்கிறார் மூத்த ஆய்வாளரான Christina Lawand.
கொரோனா காலகட்டம் உருவாக்கிய பல்வேறு பிரச்சினைகள்தான் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்கிறார் அவர்.
கொரோனா உருவாக்கியுள்ள கூடுதல் மன அழுத்தம் கனேடியர்களின் மன நலனை பாதித்துள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் போதைப்பொருட்களை பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்கிறார் Christina.