லெபனானிலிருந்து தமது பிரஜைகள் வெளியேற உதவும் கனடா

Kamal
Report this article
லெபனானில் இருந்து தமது நாட்டுப் பிரஜைகள் வெளியேறுவதற்கு உதவிகளை வழங்கி வருவதாக கனடா அறிவித்துள்ளது.
கனடிய அரசாங்கம் விமானங்களில் ஆசனங்களை முன்பதிவு செய்து இருந்தது.
அந்த வகையில் கனடிய பிரஜைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு நடவடிக்கைகள் எடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லெபனானில் தங்கியுள்ள கனடியர்கள் இவ்வாறு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபனானில் தங்கியுள்ள கனடியர்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளனர்.
கனடியர்கள் மற்றும் கனடிய நிரந்தர வதிவிட உரிமையாளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக கனடிய அரசாங்கம் லெபனானில் தங்கியுள்ள கனைடியர்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
லெபனானில் 45000 கனடியர்கள் வசிக்க கூடும் எனவும் இவர்களில் 25 ஆயிரம் பேர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் கனடிய வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.