இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 200க்கும் அதிகமானவர்கள் பலி
இஸ்ரேல் - காசாமீது மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக பெண்கள் குழந்தைகள் உட்பட200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைப்பதற்காக இஸ்ரேல் காசா பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஜனவரி 19 ம் திகதி முதல் நடைமுறையிலிருந்து வரும் யுத்த நிறுத்தத்தை வேண்டுமென்றே இஸ்ரேல் சிதைத்துள்ளது என பாலஸ்தீனிய ஜிகாத்அமைப்பு தெரிவித்துள்ளது.
232 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அல்ஜசீரா, தாக்குதலை அடுத்து தற்காலிக பாடசாலைகள்,பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள்,இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ளது.