இங்கிலாந்தில் கொரோனா சோதனைக்கு விண்ணப்பித்த 48,000க்கும் மேற்பட்ட வணிகங்கள்!
இங்கிலாந்தில் 48,000க்கும் மேற்பட்ட வணிகங்கள் பணியிட கொரோனா சோதனைக்கு கையெழுத்திட்டுள்ளன என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சிறந்த அறிகுறியாக இது பார்க்கப்படுகின்றது. மார்ச் 31ஆம் திகதி காலக்கெடுவிற்கு முன்னர் அனைத்து வணிகங்களும் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்ய நான் கடுமையாக ஊக்குவிக்கிறேன்’ என கூறினார். அனைத்து அளவிலான வணிகங்களும் மார்ச் 31ஆம் திகதி வரை தங்கள் தொழிலாளர்களுக்கு பணியிட கொவிட் சோதனைக்கு பதிவு செய்யலாம்.
விரைவான சோதனைகள் மூலம் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளைப் பெறலாம். மேலும் அவை ஜூன் 30ஆம் திகதி வரை வணிகங்களுக்கு இலவசமாக இருக்கும்.
இதன்மூலம் அறிகுறியற்ற தொற்றுகளை விரைவாகக் கண்டறிய முடியும். இதனால் பணியிட தொற்று பரவல் தடுக்கப்படும்.