பிரித்தானியாவில் ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 50,091 பேர் பாதிக்கப்பட்டதோடு 160 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 70 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 44 ஆயிரத்து 593 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 இலட்சத்து 13ஆயிரத்து 824 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 925 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் 37,459 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 89 இலட்சத்து 12 ஆயிரத்து 424 பேர் குணமடைந்துள்ளனர்.