ஒரே நாளில் கொரோனாவால் ஆயிர்த்திற்கு மேற்பட்டோர் மரணம்: அச்சத்தில் பொதுமக்கள்
ஒரே நாளில் கொரோனாவால் ஆயிர்த்திற்கு மேற்பட்டோர் மரணம்: எங்கு தெரியுமா? அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 1,358 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரே நாளில் 77, 269 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை 4கோடியே 43 இலட்சத்து 92 ஆயிரத்து 877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 கோடியே 37இலட்சத்து 74ஆயிரத்து 583 பேர் குணமடைந்த நிலையில், 7 லட்சத்து 18ஆயிரத்து 466 பேர் மரணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டெல்டா வைரஸ் தொற்று காரணமாகவே கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கொரோனாவினால் உயிரிழப்பு ஏற்படுவது மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.