விலைவாசி உயர்வு... ஊழியர்களின் ஊதியத்தை அதிகரித்த முதன்மை பல்பொருள் அங்காடி
பிரித்தானியாவின் மோரிசன்ஸ் பல்பொருள் அங்காடியானது தமது ஊழியர்களுக்கு மணிக்கு 10.20 பவுண்டுகள் ஊதியமாக வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு நெருக்கடிக்கு மத்தியில், பிற பல்பொருள் அங்காடி நிறுவனங்களின் போட்டியையும் சமாளிக்கும் நோக்கில் மோரிசன்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போட்டியாளர்களான டெஸ்கோ, அஸ்டா மற்றும் சைன்ஸ்பரி நிறுவனங்களும் ஊதிய உயர்வுகளை அறிவித்துள்ள நிலையில், மோரிசன்ஸ் நிறுவனத்தின் 80,000 தொழிலாளர்கள் இந்தத் துறையில் அதிக ஊதியம் பெறுவார்கள் என்று பல்பொருள் அங்காடி கூறியுள்ளது.
செயின்ஸ்பரி நிர்வாகம் தங்கள் ஊழியர்களின் ஊதியம் மார்ச் மாதத்தில் அதிகரித்தது, ஆனால் பின்னர் பங்குதாரர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து அனைத்து லண்டன் தொழிலாளர்களுக்கும் மீண்டும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனிடையே, ஏப்ரல் மாதம், டெஸ்கோ தனது குறைந்தபட்ச ஊதியத்தை ஜூலை இறுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு £10.10 ஆக உயர்த்துவதாக அறிவித்தது.
மட்டுமின்றி, M25 க்குள் இருக்கும் அனைத்து கடைகளையும் உள்ளடக்கிய லண்டன் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு £11.05 ஆக இருக்கும் என்பதை மோரிசன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த ஊதிய உயர்வானது பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளில் ஊழியர்களுக்கு அதிக ஊதியமளிக்கும் நிறுவனமாக மோரிசன்ஸ் மாறியுள்ளது.