ரொறன்ரோவில் அதிகமாக சாப்பிடுவதாக பெண்ணை கிண்டல் செய்த பணியாளர்கள்
ரொறன்ரோவில் பெண் ஒருவர் அதிகமாக சாப்பிடுவதாக ஹோட்டல் பணியாளர்கள் கிண்டல் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணும் அவரது நண்பரும் இதுக குறித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
ரொறன்ரோவில் அமைந்துள்ள சூசி ரெஸ்ட்ரன்ட்களில் ஒன்றான கார்டர் கிங் ரெஸ்டுரான்ட்டில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உணவு வகைகளை ஆர்டர் செய்த போது ஹோட்டல் முகாமையாளர், சமையக் கலை நிபுணர், உணவு பரிமாறும் பணியாளர் உள்ளிட்டவர்கள் கிண்டல் செய்தனர் என குற்றறம் சுமத்தப்பட்டுள்ளது.
உணவின் அளவு தமது உடலின் அளவு போன்றவற்றை ஒப்பீடு செய்து கிண்டல் செய்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் சமூக ஊடகத்தில் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் காணொளியை 1.4 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
காசென்ட்ரா மவுரா என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.