இரு பெண் பிள்ளைகளுடன் மாயமான தாயார்: பொதுமக்களிடம் உதவி கோரும் கனேடிய பொலிஸ்
கனடாவின் Longueuil பகுதி பொலிசாரே, மாயமான தாயார் மற்றும் இரு பெண் பிள்ளைகள் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
48 வயதான Claudine Runanika Kajabika மற்றும் அவரது எட்டு வயது இரட்டையர்களான Florence மற்றும் Florentine ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளனர்.
குறித்த மூவரும் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதாகவும், இரண்டு வருடங்களாக அந்த குடும்பம் குடியிருந்த கியூபெக்கிற்கும் மனிடோபாவிற்கும் இடையில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த தாயார் மற்றும் இரு பிள்ளைகள் மாயமான விவகாரத்தில், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கவலை கொண்டுள்ளதாக Longueuil பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகள் இருவரும் மாயமான நேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர்களின் தந்தையே பொலிசாரிடம் தகவல் அளித்துள்ளவர்.
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளது. ஆனால் அது தொடர்பான எந்த தரவுகளும் பொலிசாரிடம் இல்லை என்றே கூறப்படுகிறது.
இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.