அமெரிக்காவில் மாயமான 12 வயது சிறுமி குறித்து தாயார் உருக்கம்!
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பெட்டி டெய்லர்(12) தொலைந்து சென்றதை அடுத்து அவர் இறந்து இருக்கக்கூடும் என அஞ்சுவதாக அவரது தயார் கவலை வெளியிட்டுள்ளார்.
அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பெட்டி டெய்லர்(12) கடந்த 20ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் பெரும் சோகத்தில் முழ்கியுள்ளனர்.
இதையடுத்து, கிரஹாம் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் பெட்டி டெய்லர், அவரது தந்தையிடம் நான் வீட்டை விட்டு வெளியேற போவதாகவும், இனி திரும்பி வரப்போவது இல்லை என கூறி சென்றதாக கூறப்படுகின்றது.
பெட்டி டெய்லர் இன்னமும் வீடு திரும்பாத நிலையில், அவள் உணவு உண்டாளா , பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாளா என்று எனக்கு ஏதும் தெரியவில்லை என தெரிவித்ததயார், அவள் இறந்து இருக்க கூடுமோ என தாம் அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பெட்டி டெய்லர் கடைசியாக மார்ச் மாதம் 20ம் திகதி காலை 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் அவரை பொலிசார் ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள், தேடுதல் வாகனங்கள் என அனைத்தையும் கொண்டு தீவிரமாக தேடி வருவதுடன், அவரது அங்க அடையாளங்களை வெளியீட்டு யாரும் அவரை கண்டால் தொடர்புகொள்ளும் படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தனையடுத்து டெய்லரை தேடும் பணியில் அப் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களும் தற்போது இணைந்துள்ளனர்.


