விபத்தை ஏற்படுத்தி குழந்தை பலியாகக் காரணமாக இருந்த தாய் மீது குற்றச்சாட்டு பதிவு
கனடாவின் நோவா ஸ்கொஷியாவில் கடந்த ஆண்டு விபத்தொன்றில் கைக்குழந்தை ஒன்று பலியான சம்பவத்தில், குழந்தையின் தாய் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு, மே மாதம் 27ஆம் திகதி, மேடிசன் எலிசபெத் பார்க்கர் (28) என்னும் பெண் ஓட்டிய கார் ஒன்று மற்றொரு காருடன் மோதியது.
இந்த விபத்தில் மேடிசனுடன் காரில் பயணித்த அவரது நான்கு மாதக் குழந்தை பலியானாள்.
மேடிசன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது மேடிசன் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிர் பலி ஏற்படுத்தியது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அடுத்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 2ஆம் திகதி மேடிசன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |