இந்தியா தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பிடெனிடம் வலியுறுத்தும் எம்பிக்கள்
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் திடீரென அதிகரித்தமை தொடர்பில் அமெரிக்க எம்பிக்கள் பலர் கவலை வெளியிட்டுள்ளதுடன் இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு பிடென் (Biden)நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உதவ நம்மிடம் வளங்கள் உள்ளன. மற்றவர்களுக்கு இது தேவை. அவ்வாறு செய்வது நமது தார்மீகக் கடமையாக அமைகிறது என ஜனநாயக செனட்டர் எட்வர்ட் மார்க்கி (Senator Edward Markey) ஒரு ட்வீட்டில் கூறினார்.
உலகின் மிக உயர்ந்த ஒற்றை நாள் கொரோனா வைரஸ் பாதிப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் பூமி தினம் என்பது கிரகத்தின் ஆரோக்கியம் மற்றும் அனைவருக்கும் மற்றும் அதில் உள்ள அனைத்தையும் பற்றியது. ஒவ்வொரு அமெரிக்கருக்கும் போதுமான அளவு தடுப்பூசிகள் அமெரிக்காவில் உள்ளன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் தேவையான ஆதரவு தர மறுக்கிறோம் என்றும் மார்க்கி (Markey) கூறினார். இதேவேளை இந்தியாவின் நிலைமை குறித்து தான் கவலைப்படுவதாக பாராளுமனறத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவர் காங்கிரஸ்காரர் கிரிகோரி மீக்ஸ் (Gregory Meeks) தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா தொற்றுநோயின் இந்த பயங்கரமான இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு எனது எண்ணங்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.
இந்த அழிவுகரமான கொரோனா எழுச்சியின் போது தனது எண்ணங்கள் இந்திய மக்களுடன் இருப்பதாக பெண் எம்பி ஹேலி ஸ்டீவன்ஸ் (MP Haley Stevens) கூறினார். “இப்போது நம்பமுடியாத துன்பங்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கொடூரமான பாதிப்பைத் தடுக்க முடிந்தவரை உதவ சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஒருங்கிணைப்பைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஸ்டீவன்ஸ் (Stevens) கூறினார்.
இந்திய அமெரிக்க எம்பியான ரோ கன்னா (Ro Khanna), பிரபல பொது சுகாதார நிபுணர் (Ashish K Ja) ஆஷிஷ் கே ஜாவின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டு, “இந்தியா ஒரு பயங்கரமான கொரோனா எழுச்சியின் வேகத்தில் உள்ளது. அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட அவர்கள் சிரமப்படுகிறார்கள். நாங்கள் 35-40 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைக் கொண்டுள்ளோம். அமெரிக்கர்கள் ஒருபோதும் அதை பயன்படுத்த மாட்டார்கள். தயவுசெய்து அவற்றை இந்தியாவுக்கு கொடுக்கலாமா அல்லது கடன் கொடுக்கலாமா? இப்போது இது நிறைய உதவும் என ஜா சொன்னார் என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு ஆபத்தான, வேகமான இரண்டாவது அலை இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளை சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்து மில்லியன் கணக்கான உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பொருளாதார நிபுணரும் தொற்றுநோயியல் நிபுணருமான ராமணன் லக்ஷ்மிநாராயண் (Ramanan Lakshminarayan) தி நியூயார்க் டைம்ஸில் ( The New York Time)குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ ஆக்சிஜன் (Oxygen) உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அவசரமாக விமானத்தில் கொண்டு செல்ல பல இந்திய-அமெரிக்க குழுக்கள் நிதி திரட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.