தாயாரின் இறுதிச் சடங்குகளுக்காக இளைஞரின் அதிரவைக்கும் செயல்
இங்கிலாந்தில் 58 ஹெராயின் பொட்டலங்களை மலக்குடலில் கடத்திய நபருக்கு மூன்று வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் மே மாதம் 11ம் திகதி டைரோன் கிரிம்ஸ் என்ற 25 வயது நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரிடம் சிக்கினார்.
அவரிடம் மேற்கொண்ட சோதனையில் 58 ஹெராயின் பொட்டலங்களை மலக்குடலில் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தனது அம்மாவின் இறுதிச் சடங்கிற்காக பணம் செலுத்துவதற்கும், ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக டைரோன் கிரிம்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் மதிப்பு 580 பவுண்டுகள் என தெரிய வந்துள்ளது. மேலும், 29 ஹெராயின் பொட்டலங்களும் 29 கோகோயின் பொட்டலங்களும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிசார் முன்னெடுத்த விசாரணையின்போது அந்த நபர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், தனது தாயார் புற்றுநோயால் இறந்த பிறகு, அதிக நிதி நெருக்கடியின் மத்தியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்றே தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.