2 வயது குழந்தையின் திடீர் மரணம்: சிக்கிய ரொறன்ரோ இளைஞர்
ரொறன்ரோவில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்த விவகாரத்தில் இளைஞர் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 19ம் திகதி மருத்துவமனை ஒன்றில் இருந்து பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விசாரிக்க சென்ற பொலிசாரிடம், 2 வயது குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள குழந்தையின் உடற்கூராய்வில், சந்தேகத்தை ஏற்படுத்தும் காரணங்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரொறன்ரோ பொலிசார் மே 10ம் திகதி 28 வயதான Rodrigo Flores Romero என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
மரணமடைந்த 2 வயது குழந்தையும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ள Romero உம் நன்கு அறிமுகமானவர்கள் எனவும், ஆனால் அவர்களின் உறவு குறித்து மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.