மாயமான ஒன்ராறியோ தம்பதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
கடந்த மாதம் மாயமான ஒன்ராறியோ தம்பதி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்ட நிலையில், சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்ராறியோவை சேர்ந்த Kristy Nguyen(25) மற்றும் Quoc Tran(37) ஆகியோர் செப்டம்பர் 18ம் திகதி முதல் திடீரென்று மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் யார்க் பொலிசார் வெளியிட்ட தகவலில், திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றில் குறித்த தம்பதி தவறுதலாக இலக்காகியிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், குறித்த தம்பதி மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட 18ம் திகதியே, அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் தற்போது வாகன் பகுதியை சேர்ந்த Recaldo Liburd என்பவர் கைதாகியுள்ளதாக யார்க் பொலிசார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குறித்த தம்பதியில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. மேலும், எஞ்சிய இன்னொரு சடலத்தையும் மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.