கனடாவில் இளைஞர் ஒருவர் கொடூர கொலை: சந்தேக நபரை கைது செய்த பொலிஸ்!
கனடாவில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லயோட்மின்ஸ்டர் நகரில் உள்ள நடைபாதையில் கடந்த 17ஆம் திகதி ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது.
பொலிஸார் விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் டாக்சன் லிவி என தெரியவந்தது.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் லான்ஸ் டவைனி (35) என்பவரை கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. லான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபப்ட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீண்டும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போது அது தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்கமுடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.