வெளிநாட்டில் கொலை வழக்கில் சிக்கிய கனேடியர்: அவரின் கொடூர கடந்த காலம்
கடும் குளிரில் பச்சிளம் குழந்தையை கைவிட்டு தப்பிய கனேடியர், மனைவியைக் கொலை செய்த வழக்கில் ஜமைக்காவில் தண்டனை பெற்றுள்ளார்.
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவியை கொலை செய்த வழக்கிலேயே அல்ஃபான்சோ வாரன் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் குடியிருந்து வந்த அல்ஃபான்சோ வாரன் 2015ல் ஜமைக்கா பொலிசாரால் கைது செய்யப்பட்டார். புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கிங்ஸ்டன் இல்லத்தில் அவர் தனது மனைவி ஸ்டெபானி வாரனை கத்தியால் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, இவர்களின் வாக்குவாதம் தொடர்பிலும், ஸ்டெபானி தமது கணவரிடம் உயிருக்கு கெஞ்சுவதும் உள்ளூர் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் சாட்சியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிங்ஸ்டனில் உள்ள ஹோம் சர்க்யூட் நீதிமன்றத்தில் மே 12 அன்று வாரன் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். கொலைக்குற்றத்திற்கு ஜமைக்காவில் குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவது உறுதி.
இதே அல்ஃபான்சோ வாரன் கனடாவில் 22 மாத சிறைத்தண்டனைக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2008ல் கடும் குளிரில் தங்களது 8 மாத குழந்தையை கைவிட்டு தப்ப முயன்றனர் வாரன் தம்பதி.
குழந்தை ஏஞ்சலிகா லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு, குணமடைந்த பின்னர் தத்தளிக்கப்பட்டார். மட்டுமின்றி, குறித்த சம்பவத்திற்கு பின்னர் இவர்களது 3 பிள்ளைகளும் பாதுகாப்பு கருதி விலக்கப்பட்டனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் அவருக்கு 22 மாத சிறைத்தணடனை விதிக்கப்பட்டது. கனடாவில் தண்டனையை முடித்த வாரன் தம்பதி ஜமைக்காவுக்கு திருப்பிய நிலையில் 2012ல் இவர்களது 2 வயது மகன் மாயமான வழக்கில் ஜமைக்கா பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் குறித்த சிறுவனின் அழுகிய உடல் வாரன்ஸின் கிங்ஸ்டன் குடியிருப்பில் ஒரு சூட்கேஸில் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் வாரன் தம்பதி மீது வழக்கு பதியவில்லை என்றே தகவல் வெளியானது.