சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு! 2 இளைஞர்கள் பலி
அமெரிக்காவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, மர்ம நபரால் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வரும்நிலையில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஓஹியோ மாகாணத்தின் சின்சின்னாட்டி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இளைஞர்கள் 400 பேர் திரண்டனர்.
இந்நிலையில் அவர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 16 முதல் 19 வயதுடைய 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா நாட்டில் ஓஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் வாலிபர்கள் 400 ஒன்று சேர்ந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தீடிரென மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 மற்றும் 19 வயதுடைய 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.