வெளிநாடொன்றில் கோயில்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
வங்கதேசத்தின் தெற்கு குல்னா மாவட்டம் சியாலி கிராமத்தில் சில இந்துக்கள் கீர்த்தனை பாடிக்கொண்டே அங்குள்ள மகாஸ்மசன் கோயிலுக்கு சென்றுள்ளனர்.
அந்த வழியிலுள்ள மசூதியிலிருந்த இஸ்லாமியர்கள் தொழுகைக்கு இடையூறு செய்யும்வகையில் கீர்த்தனை பாடுவதாக குற்றம் சாட்டினர்.
இருதரப்புக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. இதைத் தொடர்ந்து கோயிலுக்குள் நுழைந்த சில மர்ம நபர்கள் கோயிலை அடித்து நொறுக்கினர்.
அதோடு அருகில், புர்பபாரா பகுதியில் உள்ள இந்து கோயில்களான ஹரி, துர்கை மற்றும் கோவிந்த் கோயில்களுக்குள் நுழைந்து சிலைகளை உடைத்து நொறுக்கின்றனர்.
அப்பகுதியிலிருந்த இந்துக்களின் கடைகள், வீடுகள் மற்றும் சுடுகாடு ஆகியவையும் நொறுக்கப்பட்டது. அந்த பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சியாலி கிராமம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் பாகிஸ்தானில் உள்ள இந்துகோயில் ஒன்றில் மர்மநபர்களால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த அதிர்ச்சி முடிவதற்குள் வங்கதேசத்தில் கவலையளிக்கும் மற்றோர் சம்பவம் அரங்கேறியுள்ளது.