அமெரிக்காவின் உயர்நிலைப் பள்ளியில் மர்ம நபர் வெறிச்செயல்; மாணவர்களின் நிலை?
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சில மணிநேரங்களுக்கு முன் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு குறித்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலைப் பள்ளியில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த சம்பவம் நடந்தது. தெற்கு வாட்சன் சாலையின் 7000 தொகுதியில் அமைந்துள்ள டிம்பர்வியூ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆயுதம் ஏந்திய ஒருவர் இருப்பதாக நம்பப்படுகிறது.
குறித்த பள்ளியை மான்ஸ்ஃபீல்ட் சுயாதீன பள்ளி மாவட்டம் (MISD) இயக்குகிறது. ஆர்லிங்டன் உதவி பொலிஸ் தலைவர் கெவின் கோல்பியே (Kevin Kolbye) கூறுகையில், வகுப்பறையில் நடந்த சண்டையின் போது துப்பாக்கி சூடு நடந்ததாக கூறினார்.
சம்பவம் தொடர்பில் பின்னர் வெளிவந்த தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து , தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் தீவிரமாக தேடிவருவதுடன் சந்தேக நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை மணவர்களின் , பெற்றோர்கள் 151 மான்ஸ்ஃபீல்ட் வெப் சாலையில் அமைந்துள்ள மாணவர் சத்துணவு மையத்தில் கூடுமாறு கேட்டுக்கொள்ளபட்டுள்ள நிலையில் , உயர்நிலைப் பள்ளியில் இருந்து குறித்த இடத்திற்கு மாணவர்களைக் கொண்டு செல்லவுள்ளதாக மான்ஸ்ஃபீல்ட் ISD அறிவித்துள்ளது.