ஜப்பானில் இடம்பெற்ற பாண்டா கரடிகளுக்கான பெயர் சூட்டு விழா
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிறந்த இரட்டைப் பாண்டா கரடி குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் யுனொ மிருகக்காட்சி சாலையில் உள்ள பாண்டா கரடி ஒன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றது. இதனையடுத்து மிருகக்காட்சி சாலை நிர்வாகம் இந்த குட்டிகள் பொருத்தமான பெயர்களை எழுதி அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு 1,90,000 பெயர்களை எழுதி அனுப்பி இருந்தனர். இதிலிருந்து இருந்து இரண்டு பெயர்களை மிருகசாலை நிர்வாகம் தேர்வு செய்தது. பெயர் சூட்டும் விழா மிருககாட்சி சாலையில் நேற்று நடந்தது. டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே இரட்டை பாண்டா குட்டிகளின் பெயர்களை அறிவித்தார்.
பெண் பாண்டா குட்டிக்கு லெய் லெய் என்றும், ஆண் குட்டிக்கு ஸியோ ஸியோ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.