அனுமதி இல்லாமல் நுழைந்த அமெரிக்க கடற்படை; இந்தோ-அமெரிக்க உறவுகள் மீது சிக்கல் ஏற்படுமா?
இந்தோ-அமெரிக்க உறவுகள் மீது சிக்கலை ஏற்படுத்தக் கூடிய ஒரு நடவடிக்கையாக, அமெரிக்க கடற்படை லட்சத்தீவு தீவுகளுக்கு அருகே இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் “வழிசெலுத்தல் செயல்பாட்டு சுதந்திரத்தை” மேற்கொண்டுள்ளது.
முக்கியமாக, அமெரிக்க கடற்படை ஒரு அறிக்கையில் ஏப்ரல் 7’ஆம் தேதி இந்தியாவில் இருந்து முன் அனுமதியை பெறாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியது.
இந்த நிலையில் அமெரிக்க கடற்படை இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் இராணுவப் பயிற்சிகளுக்கு முன் ஒப்புதல் தேவையில்லை என கூறியதுடன், அவற்றை அதிகப்படியான கடல்சார் உரிமைகோரல்கள் என்றும் அழைத்தது.
இந்த அறிக்கை இந்திய அரசிடம் எதிர்வினையை ஏற்படும் என கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்க கடற்படை அதன் அறிக்கையில் இந்தியாவின் முன் ஒப்புதல் தேவை என்பது சர்வதேச கடல்சார் சட்டத்திற்கு முரணானது என கூறியதுடன், இதுபோன்ற வழிசெலுத்தல் நடவடிக்கைகளின் சுதந்திரம் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் கூறியுள்ளது.
மேலும் , இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு அரசியல் அறிக்கையை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் அது மேலும் கூறியுள்ளது.
இதேவேளை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக உருப்பெற்றுள்ள அமெரிக்கா இவ்வாறு நடந்து கொண்டுள்ளது குறித்து இந்தியா எவ்வாறு பதில் கொடுக்கும் என அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது.