இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை!
இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் வரை தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான நீண்ட மோதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரான் இந்த அறிக்கையை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடினமான காலங்களுக்கு வழிவகுக்கும்
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இயல் சமீர் தனது நாடு ஒரு நீண்ட மோதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது எதிர்காலத்தில் கடினமான காலங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஜெனீவாவில் ஐரோப்பிய இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார்.
அங்கு, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்திய பின்னரே ஈரான் இராஜதந்திர நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
அதோடு ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது என்றும், இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.