ஒன்லைனில் ஸ்லோ பாய்சன் ஆர்டர் செய்த மருமகன்; தொழிலதிபர் குடும்பத்துக்கு நேர்ந்த கதி!
இந்தியா டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் வீட்டினருக்கு மெல்லக் கொள்ளும் விஷத்தை உணவில் பரிமாறியுள்ள சம்பவம் பெரும் அதிரச்சியினை ஏற்படுத்தியுள்ளது. . டெல்லியை சேர்ந்த 62 வயதான தேவேந்திர மோகன் ஷர்மா என்பவர் பொலிஸ்நிலையத்தில் தன்னுடைய மனைவி மருத்துவமனையில் இறந்து விட்டார்.
எனது மகள் அனிதா ஷர்மாவை என்னுடைய மருமகன் வருண் அரோரோ கொலை செய்திருப்பாரோ என சந்தேகமாக உள்ளதாக புகாரில் அளித்துள்ளார். இதனையடுத்து டெல்லி பொலிசார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பியதில் அவரது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் தேவேந்திர மோகன் ஷர்மாவின் ஒரு மகள் கடந்த மாதம் இதேபோல் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது மூத்த மகள் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோமாவில் இருக்கும் பெண்ணின் உடலில் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியபோது அவரது உடலிலும் அந்த விஷத்தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேவேந்திர மோகன் ஷர்மா உடலிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவரது உடலிலும் விஷத்தன்மை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மருமகனான வருண் ஆரோரா ஜனவரி மாதம் எங்கள் குடும்பத்தினருக்கு மீன் குழம்பு பரிமாறினார்.
ஆனால் அவர் அந்த உணவை உண்ணவில்லை என மோகன் ஷர்மா கூறியுள்ளார் . இதனையடுத்து வருண் ஆரோராவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். எனினும் அவரிடம் இருந்து எந்த பதிலையும் பொலிசாரால் பெற முடியவில்லை. மிகவும் அப்பாவி போன்றே நடித்துள்ளார்.
இதனையடுத்து அவரது வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான் அவரது வீட்டில் அந்த விஷம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது லேப்டாபை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த விஷம் குறித்து அவர் தேடிப்படித்து அதனை இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
வருணின் மாமனார் ஹோமியோபதி மருத்துகளை தயாரிக்கும் தொழிற்சாலையை வைத்துள்ளார். அதனை சதகமாக பயன்படுத்தி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உள்ளதாக கூறி இந்த விஷத்தை ஆர்டர் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடத்திய விசாரணையில் 6 வருடத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்துக்கு பழி வாங்கும் நோக்கில் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.
அதாவது வருணின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானபோது வருணின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். தனது அப்பாவே மீண்டும் தனக்கு மகனாக பிறப்பார் என வருண் எண்ணியுள்ளார். இந்நிலையில் வயிற்றில் இருக்கும் கரு போதிய வளர்ச்சியை எட்டாமல் இருந்ததால் அதனை கலைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதில் வருணுக்கு துளியேனும் உடன்பாடில்லை. ஆனாலும் அவரது பேச்சை மீறி அவரது மனைவியும் குடும்பத்தினரும் அந்த கருவை கலைத்துள்ளனர். அதன்பின்னர் வருணின் மனைவி இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். எனினும் முதல் கருவை கலைத்ததை தனக்கு ஏற்பட்ட அவமானமாக வருண் கருதியுள்ளார் .
இதன் காரணமாக மனைவியையும் அவரது குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்ற வஞ்சத்தோடு இருந்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் மீன் சமைத்து அதில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு பரிமாறியுள்ளார்.
எனினும் தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் அந்த உணவை பரிமாறவில்லை என்பதுடன் அவரும் அதனை உட்கொள்ளவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் திட்டமிட்டு மாமனார் குடும்பத்தை கொல்லதுணிந்த டெல்லியில் சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.