தலிபான்கள் விடுத்த புதிய அறிவிப்பு; அச்சத்தில் பெண்கள்
பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலீபான்கள் தெரிவித்துள்ளமை அங்குள்ள பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாக பயணிக்க தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலிபன்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களை ஒளிபரப்ப கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அரசு தடை விதித்தது.
மேலும் , தொலைக்காட்சியில் பங்கேற்கும் பெண் பத்திரிகையாளர்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.