ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்; இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடி
கனடாவில் இலங்கை அரசுக்கு எதிராக ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட அறிவியற் கிழமைக்கான சட்டமூலம் சட்டமாக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட அறிவியற் கிழமைக்கான சட்டமூலம் சட்டமாக நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவியற் கிழமைக்கான சட்டமூலத்தை மூன்றாவது வாசிப்புக்கு விஜய் தணிகாசலம் கொண்டு வந்திருந்தார்.
இந்த நிலையில்,சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே விஜய் தணிகாசலம் இதனை தெரிவித்துள்ளார்.