நாளை முதல் சுவிஸ் வாகனங்களில் புதிய நடைமுறை அறிமுகம்!
சுவிட்சர்லாந்து வாகனங்களில் கறுப்பு பெட்டி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி நாளை ஜுலை மாதம் முதல் சுவிட்சாலாந்தில் பயணிகள் போக்குவரத்து கார்கள் மற்றும் வேன்களில் கறுப்பு பெட்டி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நெறிமுறைகளுக்கு அமைய இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வீதி விபத்துக்களின் போது தகவல்களை திரட்டிக் கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம் புதிய தொழில்நுட்ப சாதனத்தின் ஊடாக விபத்துக்கு முன்னரான தகவல்களையும் திரட்டிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.