ஆபத்து காலங்களில் அரணாகும்; பிரான்ஸில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை
பிரான்ஸில் FR-Alert என அழைக்கப்படும் புதிய கையடக்க தொலைபேசி எச்சரிக்கை அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேது ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நடந்திருந்தால் செயலி அல்லது குறுந்தகவல் இல்லாமல் இது தொடர்பில் பொது மக்களை எச்சரிக்கும் வகையில் புதிய சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த சேவை ஊடாக அந்த பகுதியில் வாழும் அனைத்து மக்களையும் எச்சரிக்க உதவும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த அமைப்பு இந்த மாத இறுதியில் செயல்படுத்தப்படும் என்றும், இது அவசரகாலச் சேவைகளாக தற்போதைய தகவல் தொடர்புகளுக்கு மேலதிகமாக காணப்படும் என கூறப்படுகின்றது.
அதேவேளை பிரான்ஸில் கடந்த வார இறுதியில் ஒருவர் உயிரிழந்த மற்றும் 15 பேர் காயமடைந்த வெள்ளம், புயல்கள் வன்முறை போன்ற அவசரநிலைகள் மற்றும் முக்கிய சம்பவங்களின் போது மக்களை எச்சரிக்கை இது பயன்படுத்தப்படும். அசம்பாவிதம் நடந்துவிட்டால் இந்த சேவை எச்சரிக்கை சத்தம் எழுப்பும்.
கையடக்க தொலைபேசியில் சத்தம் நிறுத்தப்பட்டு சைலன்ட் மோட்டில் இருந்தாலும் கையடக்க தொலைபேசிகள் வைப்ரேட் ஆகும் வகையில் இந்த செயலி செயற்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் எப்படியிருப்பினும் எந்த சிக்னலும் இல்லாமல், off செய்யப்பட்ட கையடக்க தொலைபேசி அல்லது flight மோட் முறையில் வைக்கப்பட்ட கையடக்க தொலைபேசி பயனாளர்கள் இந்த எச்சரிக்கை சமிக்ஞையை பெற மாட்டார்கள். இந்த சேவையானது ஆபத்து, சம்பவம் நடக்கும் இடம் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவைப்படும் விடயங்கள் பற்றிய விபரங்களைக் கொண்டிருக்கும்.
அத்துடன் இந்த சேவையை பெற கணினியில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் சம்பந்தப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மக்களை எச்சரிப்பதை நியாயப்படுத்தும் எந்தவொரு முக்கிய நிகழ்வுக்கும் இந்த அமைப்பு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.