பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய கட்டுப்பாடுகள்!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கு புதிய கட்டுப்பாட்டுகளை மருத்துவர் போனி ஹென்றி அறிவித்தார். மூன்று வாரங்கள் சர்க்யூட் பிரேக்கரை மேம்படுத்திய கட்டுப்பாடுகளாக இவை அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் உட்புறத்துக்கும் உணவு அல்லது பானங்களை பரிமாற முடியாது. சர்க்யூட் பிரேக்கரின் காலத்திற்கு பெரியவர்களுக்கான உட்புற உடற்பயிற்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை , ஈஸ்டர் நீண்ட வார இறுதிக்கு சில நாட்களுக்கு முன்பு, உட்புற வழிபாட்டு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஏப்ரல் 19ஆம் திகதி வரை விஸ்லர்-பிளாக் காம்ப் பனிச்சறுக்கு விடுதியை (ஸ்கை ரிசார்ட்) மூடவும் மாகாணம் முடிவு செய்துள்ளது.