கனேடிய மக்கள் பட்டினியால் வாட நேரிடும்
கனேடிய மக்கள் பட்டினியால் வாட நேரிடலாம் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் பணவீக்க நிலைமை அநேகமான வாடிக்கையாளர்களின் உணவுப் பொருள் கொள்வனவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்க நிலைமையானது கனடாவில் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக றொரன்டோ பல்கலைக்கழகத்தின் போசாக்கு விஞ்ஞான பேராசிரியர் வெலாரி டாராசுக் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்னதாக உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.7 வீதமாக உயர்வடைந்திருந்தது என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1981ம் ஆண்டின் பின்னர் நாட்டில் பதிவான மிகப் பாரிய உணவுப்பொருள் விலை அதிகரிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது 11.2 வீதமான கனேடியர்கள் மித அளவில் அல்லது பாரதூரமான உணவுப் பாதுகாப்பின்மையை உணர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வறிய மக்களுக்காக நிறுவப்பட்டுள்ள உணவு வங்கிகளிலும் கூடுதல் எண்ணிக்கியல் மக்கள் நலன் பெற்று வரும் நிலைமை உருவாகியுள்ளது.