கெஞ்சினோம்... மருத்துவமனை திருப்பி அனுப்பிய சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: கதறும் குடும்பம்
பிரிட்டனில் ரோதர்ஹாம் பகுதி மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட சிறுவன் மரணமடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
ரோதர்ஹாம் பொதுமருத்துவமனையே, படுக்கை பற்றாக்குறை காரணமாக 5 வயது சிறுவனை திருப்பி அனுப்பியுள்ளது. உறவினர்கள் பலர், அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சியதாகவும், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது என கண்கலங்கியுள்ளனர்.
ஜாகிர் அகமது என்பவர் தெரிவிக்கையில், தமது மருமகன் யூசுப் மஹ்மூத் நசீர் என்பவருக்காக பலமுறை கெஞ்சினோம். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் என்றோம், ஆனால், போதிய மருத்துவர்கள் மற்றும் படுக்கை இல்லை என கூறி தங்களை திருப்பி அனுப்பியதாக கூறியுள்ளார்.
சிறுவன் யூசுப் நிமோனியா பாதிப்பால் திங்களன்று மரணமடைந்துள்ளார். நோய்த்தொற்று அவரது நுரையீரலுக்கு பரவியதாகவும் பல உறுப்புகள் இதனால் செயலிழந்தது எனவும், இதன் விளைவாக பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோதர்ஹாம் பொதுமருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பிய அன்று இரவு, சிறுவனின் உடல் நிலை மோசமடைய, உடனடியாக ஷெஃபீல்ட் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
ஆனால், சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனாதாக கூறுகின்றனர். உரிய நேரத்தில் உதவி மறுக்கப்பட்டதாலையே 5 வயது சிறுவனை இழக்க நேரிட்டது என்கிறார்கள் குடும்பத்தினர்.