நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது ; எச்சரிக்கும் ட்ரம்ப்
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் சரணடைய வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை, அந்நாட்டு ஆட்சியாளரான அயத்துல்லா அலி கமேனி இன்று நிராகரித்தார். ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று கூறினார்.
போர் தொடங்குகிறது
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:
போர் தொடங்குகிறது; சமரசத்துக்கு வாய்ப்பில்லை; ஈரான் தலைவர் கமேனி அறிவிப்பு நான் இணையலாம், இணையாமல் இருக்கலாம், நான் என்ன செய்யப்போகிறேன் என்று யாருக்கும் தெரியாது.
ஈரான் முற்றிலும் பாதுகாப்பற்றது, எந்த வான் பாதுகாப்பும் இல்லை. ஈரான் தொடர்பு கொண்டாலும் பேசுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துமா, நடத்தாதா என்பது பற்றி எந்த அறிவிப்பும் டிரம்ப் வெளியிடவில்லை. இது தொடர்பாக அவர், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.