ஒட்டாவா மேயரின் கடுமையான எச்சரிக்கை
ஒட்டாவா மேயர் ஜிம் வெட்சன் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கனடா தின சிறப்பு நிகழ்வுகளின் போது எந்தவிதமான சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமில்லை அவர் அறிவித்துள்ளார்.
மிகவும் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களை குழப்புவதற்கு வருவோரை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வுகளில் குழப்பம் விளைவிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்படாது எனவும் எவ்வித மன்னிப்பும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்ட மீறல்களில் ஈடுபடுவோர் தராதரம் பார்க்கப்படாது எனவும், விளைவுகளை எதிர்நோக்க ஆயத்தமாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கனடா தின நிகழ்வுகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு கட்டங்களாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.