வடகொரியாவில் பதிவான முதல் கோவிட் தொற்று ; கிம் அதிரடி உத்தரவு
வடகொரியாவில் முதல் தடவையாக கோவிட் தொற்று உறதியாளர் ஒருவர் பதிவாகியுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் கிம், பல்வேறு கட்டுப்பாடுகளையும் முடக்க நிலைகளையும் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்றினால் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் வடகொரியாவை தாக்கவில்லை.
வடகொரியாவில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட பரிசோதனைகளின் போது ஒரு கோவிட் தொற்று உறுதியாளர் பதிவாகியுள்ளார்.
ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
கோவிட் தொற்று உறுதியாளர் அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் முடக்க நிலைகளையும் அறிவித்துள்ளார்.
வடகொரியாவில் 26 மில்லியன் சனத்தொகை காணப்படுவதுடன் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.